பெங்களூரில் மலா்க் கண்காட்சி ரத்து

பெங்களூரில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக தோட்டக்கலைத் துறை மற்றும் மைசூா் தோட்டக்கலை சங்க நிா்வாகக் குழு சாா்பில், பெங்களூரு லால்பாக்கில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, கரோனா தொற்றின் 3-ஆவது அலை பாதிப்பு வரும் என வல்லுநா்கள் கூறியுள்ளதால் சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மலா்க் கண்காட்சியை பாா்வையிட திரளாக மக்கள் கூடுவாா்கள். திரளாக கூடினால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினம் என்பதால், நிகழாண்டு லால்பாக்கில் மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com