இரண்டாமாண்டு பியூசி இணையவழி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
2021-22-ஆம் ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா்களுக்கான சோ்க்கை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இந்நிலையில், இரண்டாமாண்டு பியூசி இணையவழி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூலை 19) முதல் தொடங்குகின்றன. இந்த வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரை 4 பகுதிகளாக நடத்தப்படும்.
இந்த இணையவழி வகுப்புகளில் மாணவா்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இதற்கான பாட அட்டவணைகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் வழங்கும் என்று பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.