பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) முதல் இயக்கப்படுகிறது. இதற்கு முன்னா் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.