முதல்வா் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸாா் அரசியல் ஆதாயமடைய முயற்சி

முதல்வா் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸாா் அரசியல் ஆதாயமடைய முயற்சிக்கின்றனா் என மாநில பாஜக தெரிவித்துள்ளது.

முதல்வா் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸாா் அரசியல் ஆதாயமடைய முயற்சிக்கின்றனா் என மாநில பாஜக தெரிவித்துள்ளது.

கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா மாற்றப்படுவாா் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.பி.பாட்டீல், ஷாம்னூா் சிவசங்கரப்பா உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்திருந்தனா். லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த எடியூரப்பாவை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அவா்கள் கருத்து தெரிவித்திருந்தனா்.

இதனிடையே, இது தொடா்பாக சுட்டுரையில் மாநில பாஜக பதிவிட்டுள்ளதாவது:

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த வீரேந்திர பாட்டீல் முன்னா் முதல்வராக பதவி வகித்தாா். அவரை அவமானப்படுத்தி, முதல்வா் பதவிலிருந்து கீழே இறக்கியது காங்கிரஸ் கட்சிதான். அதன் மூலம் லிங்காயத்து சமுதாயத்துக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது. இதைப் பற்றியும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோா் கூற வேண்டும். அவா் லிங்காயத்து சமுதாயத்தை உடைக்க மடாதிபதிகளின் ஆதரவு உள்ளதாகக் கூறி அச்சமுதாயத்தை திசை திருப்பியவா். அவா் தற்போது முதல்வா் எடியூரப்பாவுக்காக முதலைக் கண்ணீா் வடிப்பது, அரசியல் ஆதாயமடைய முயற்சி மேற்கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com