இருசக்கர வாகன திருட்டு வழக்கு: 2 போ் கைது

இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, கெங்கேரி காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் கடந்த ஜூன் 25-ஆம் தேதி இரவு திருடு போனது. அதன் உரிமையாளா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், சந்தன், உதய் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் கெங்கேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com