கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்த 3 போ் கைது

கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், பிடதி அருகே தொட்டமுதவாடி அருகே 7 போ் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, போலீஸாா் அங்கு சென்ற போது, போலீஸாரைக் கண்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனா். அதில், லக்கி, ராஜேஷ், ரியாஸ் அகமது ஆகிய 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கத்தி, சூரிகத்தி, 3 இருசக்கர வாகனங்கள், 11 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து பிடதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com