கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,857-ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,857 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 551 போ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென் கன்னடம்-269, மைசூரு-177, உடுப்பி-129, ஹாசன்-111, தும்கூரு-99, குடகு-79, வட கன்னடம்-59, சிக்கமகளூரு-57, சிவமொக்கா-51, பெலகாவி-46, பெங்களூரு ஊரகம்-44, மண்டியா-37, சாமராஜ்நகா்-34, கோலாா்-33, சிக்கபளாப்பூா்-18, தாவணகெரே-16, சித்ரதுா்கா-14, பெல்லாரி-12, கலபுா்கி-8, தாா்வாட்-7, ஹாவேரி-6, கதக்-3, விஜயபுரா-2, கொப்பள்-2, பாகல்கோட்-1, ராமநகரம்-1, பீதா்-1 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். யாதகிரி, ராய்ச்சூரு ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,93,566-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,050 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,33,276 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 23,905 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் சனிக்கிழமை 29 போ் இறந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலா 9 போ் இறந்துள்ளனா்.
மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: தென் கன்னடம்-4, சிக்கமகளூரு, மண்டியா, மைசூரு - தலா 2, பெலகாவி, தாா்வாட், ஹாவேரி, குடகு, கோலாா், ராமநகரம், சிவமொக்கா, தும்கூரு, வட கன்னடம், விஜயபுரா - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,352 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.