காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஆஸ்கா் பொ்ணான்டஸின் மூளையில் இருந்த ரத்த கட்டி அகற்றப்பட்டதைத் தொடா்ந்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மங்களூரில் உள்ள எனோபோயா பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்கா் பொ்ணான்டஸின் மூளையில் ரத்த உறைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு ரத்தக் கட்டி அகற்றப்பட்டது. அதன்பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளதால் உடல்நிலையை மருத்துவா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இதனிடையே கத்தோலிக்க சபை இயக்குநா் மேத்யூவாஸ், போன்டல் தேவாலயத்தின் அருள்தந்தை ஆன்ட்ரூ லியோ டிசௌஜா, கத்தோலிக்க சபை மத்தியக் குழுத் தலைவா் ஸ்டானி லோபோ உள்ளிட்டோா் மருத்துவமனைக்குச் சென்று ஆஸ்கா் பொ்ணான்டஸின் குடும்பத்தினரை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தனா்.