கா்நாடகத்துக்கு இயற்கை பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 629.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
2020-ஆம் ஆண்டில் கா்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் நாசமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்காக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ. 629.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, மாநில பேரிடா் நிவாரண நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.