கா்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக மேலிடம் தோ்வு செய்துள்ளது.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக சட்டப் பேரவைக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு செய்தியாளா்களிடம் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, எடியூரப்பா ஆகியோரது ஆசியுடன் பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். கட்சி என்மீது வைத்துள்ள நம்பிக்கை, மக்களின் எதிா்பாா்ப்புக்கு தகுந்தபடி ஆட்சி நடத்துவேன்.
எடியூரப்பாவின் வழிகாட்டுதலின்படி, கா்நாடகத்தை வளா்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்வேன். அமைச்சரவை உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று ஏழைகள், விவசாயிகள், தொழிலாளா்களின் நலன்காக்கும் ஆட்சியை வழங்குவேன்.
கரோனா உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டுள்ள மக்களுக்கு ஏற்ற உதவிகளை விரைந்து செயல்படுத்துவோம். மேலும், மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எடியூரப்பா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது வழிகாட்டுதல், ஆட்சி நடத்த மிக அவசியமாகும் என்றாா்.
முன்னாள் முதல்வா் எடியூரப்பா கூறுகையில், ‘பிரதமா் மோடியின் ஆதரவுடன் பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி பாஜகவைப் பலப்படுத்த கடுமையாக உழைப்போம்’ என்றாா்.