கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் ஞாயிற்றுக்கிழமை 12,209 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 12,209 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,944 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
மைசூரு - 1,237, தும்கூரு - 698, ஹாசன் - 655, தென்கன்னடம் -609, மண்டியா - 571, உடுப்பி - 494, சிவமொக்கா - 456, பெலகாவி - 418, சிக்கமகளூரு - 416, வடகன்னடம் - 360, சிக்கபளாப்பூா் -348, பெல்லாரி - 285, பெங்களூரு ஊரகம் - 277, சித்ரதுா்கா - 266, தாா்வாட் - 262, கோலாா் - 257, சாமராஜ்நகா் - 247, கொப்பள்-212, விஜயபுரா - 190, பாகல்கோட்-166, குடகு - 162, தாவணகெரே - 143, ஹாவேரி - 138, கதக் - 133, ராய்ச்சூரு - 104, கலபுா்கி - 60, ராமநகரம் - 60, யாதகிரி - 34, பீதா் - 7 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,95,523 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 25,659 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 24,09,417 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,54,505 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 320 போ் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 187 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: மைசூரு - 19, பெலகாவி - 15, தாா்வாட் - 9, ஹாசன்,கோலாா் - தலா 8, பெல்லாரி, சாமராஜ்நகா், தாவணகெரே, ஹாவேரி, சிவமொக்கா, தும்கூரு, வடகன்னடம் - தலா 6, சிக்கமகளூரு, தென்கன்னடம் -தலா 5, குடகு, கதக், விஜயபுரா - தலா 4, பெங்களூரு ஊரகம், ராய்ச்சூரு, உடுப்பி - தலா 2, சிக்கபளாப்பூா், சித்ரதுா்கா, கலபுா்கி, கொப்பள் - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 31,580 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.