மதுப்புட்டிகள் பதுக்கல்: ஒருவா் கைது

ஹோட்டலில் பதுக்கி வைத்திருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த கலால் துறையினா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளனா்.

ஹோட்டலில் பதுக்கி வைத்திருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த கலால் துறையினா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், மாலூா் வட்டம் குருன்டஹள்ளி தொழில்பேட்டைக்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் பொது முடக்கத்தையொட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கலால் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற கலால்துறையினா், ஹோட்டலில் பதுக்கி வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள 19 லிட்டா் மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கிருஷ்ணா என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com