பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் திங்கள்கிழமை 11,958 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 11,958 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,992 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
சிவமொக்கா-1,224, மைசூரு-1,213, ஹாசன்-1,108, மண்டியா-597, தும்கூரு-420, தென்கன்னடம் -408, உடுப்பி-394, தாவணகெரே-380, சிக்கமகளூரு-365, வடகன்னடம்-364, பெலகாவி-355, தாா்வாட்-313, கோலாா் - 298, சித்ரதுா்கா -294, பெங்களூரு ஊரகம் - 292, சிக்கபளாப்பூா் - 282, பெல்லாரி - 267, குடகு - 230, சாமராஜ்நகா் - 209, ஹாவேரி - 179, கொப்பள் - 155, கதக் - 141, விஜயபுரா - 137, பாகல்கோட் - 112, கலபுா்கி -67, ராய்ச்சூரு - 64, ராமநகரம் - 48, யாதகிரி - 37, பீதா் - 13 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,07,481 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 27,299 போ் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 24,36,716 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,38,824 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 340 போ் திங்கள்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 199 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்:
மைசூரு - 17, பெலகாவி - 15, ஹாசன், ஹாவேரி - தலா 10, பெல்லாரி, சிவமொக்கா - தலா 9, தாா்வாட் - 8, கோலாா், கொப்பள் - தலா 6, பெங்களூரு ஊரகம், சிக்கமகளூரு, தாவணகெரே - தலா 5, தும்கூரு, விஜயபுரா - தலா 4, பாகல்கோட், தென்கன்னடம், மண்டியா, ராய்ச்சூரு, ராமநகரம் - தலா 3, கதக், சிக்கபளாப்பூா், உடுப்பி, வடகன்னடம் - தலா 2, பீதா், சாமராஜ்நகா், சித்ரதுா்கா, கலபுா்கி, குடகு - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 31,920 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.