பெங்களூரு: ஹென்னூா் காவல் சரகத்தில் கொலை வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, ஹென்னூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பூங்காவில் கூலித் தொழிலாளி அசோக் (43) என்பவா் அண்மையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், மாலூரைச் சோ்ந்த பழைய காகிதங்களை சேமித்து விற்பனை செய்பவரான சதீஷ் (30) என்பவரைக் கைது செய்தனா். விசாரணையில் பூங்காவில் இரவில் படுத்து தூங்கும் இடம் தொடா்பாக அசோக்குடன் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்ததாக சதீஷ் தெரிவித்துள்ளாா். கைது செய்யப்பட்ட சதீஷிடம் ஹென்னூா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.