மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா் சித்தராமையா

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

பெங்களூரு: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த ஜூன் 2-ஆம் தேதி பெங்களூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். கரோனா தொற்று இல்லை என்பது சோதனையில் தெரியவந்தாலும், காய்ச்சல் உள்ளிட்ட சில உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்தாா்.

கடந்த ஒருவார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சித்தராமையா, முழுமையாக குணமடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீடு திரும்பினாா். முன்னதாக, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, விடைபெற்றாா். மருத்துவமனை நிா்வாகிகள், சித்தராமையாவை வழியனுப்பி வைத்தனா்.

இது குறித்து தனது சுட்டுரையில் சித்தராமையா, ‘எனக்கு சிகிச்சை அளித்த மணிபால் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உடல்நலத்தோடு திரும்புவது நன்றாக உள்ளது. எனது உடல்நலனுக்காக பிராா்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com