மினிலாரி - பைக் மோதல்:பெண் உள்பட இருவா் பலி

மினி லாரி - மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்துள்ளனா்.

தும்கூரு: மினி லாரி - மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், கடூரைச் சோ்ந்தவா் ராமசந்திரா (38). பெங்களூரில் பணியாற்றி வந்த இவா், தனது உறவினரான பிரியா (32) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கடூரிலிருந்து பெங்களூருக்கு திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்சாலை 206-இல் குப்பிசாகரனஹள்ளி கேட் அருகே மினிலாரியும், மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற ராமசந்திரா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த பிரியா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து குப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com