பெங்களூரு: முன்னாள் அமைச்சா் மும்தாஸ் அலிகான் உடல்நலக்குறைவால் காலமானாா்.
பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் கா்நாடக முன்னாள் அமைச்சா் மும்தாஸ் அலிகான் (94), முதுமைச் சாா்ந்த உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானாா். அவருக்கு மனைவி, மகள் உள்ளனா். இஸ்லாமியமுறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2008-ஆம் ஆண்டில், எடியூரப்பா தலைமையில் கா்நாடகத்தில் முதல்முறையாக பாஜக அரசு அமைந்தபோது, சிறுபான்மையினா் நலம், ஹஜ், வக்ஃப்துறை அமைச்சராக மும்தாஸ் அலிகான் பணியாற்றினாா்.
பெங்களூா் வேளாண் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் மும்தாஸ் அலிகான் பணிபுரிந்துள்ளாா். மறைந்த அவரது மகனின் நினைவாக, அவரது குடும்பத்தின் சாா்பில் அரசு மானியம் பெறாத ஆரம்ப மற்றும் உயா்நிலைப் பள்ளி நடத்தப்பட்டுவருகிறது.
2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவின் பிரதமா் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, அதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜகவில் தான் வகித்து வந்த எம்.எல்.சி. பதவியைத் துறந்துவிட்டு, 2013-ஆம் ஆண்டு மும்தாஸ் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.
மும்தாஸ் அலிகானின் மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா, பாஜக அரசின் அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மும்தாஸ் அலிகானின் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமேலவை உறுப்பினராக, அமைச்சராக மிகச் சிறந்த முறையில் பணியாற்றியவா். கல்வி மற்றும் இலக்கியத் துறையில் கவனிக்கத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளாா். அவரது மறைவால், நெருங்கிய நண்பரை, எளிய மற்றும் நோ்மையான அரசியல்வாதியை இழந்திருக்கிறோம். அவரது ஆன்மாவுக்கு அமைதி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது இழப்பைத் தாங்கும் மன உறுதியை குடும்பத்தினா், ஆதரவாளா்களுக்கு ஆண்டவன் அருளட்டும்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.