வீடுகளில் திருட்டு: நேபாளத்தை சோ்ந்த 6 போ் கைது

வீடுகளில் புகுந்து திருடியதாக நேபாள நாட்டைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு: வீடுகளில் புகுந்து திருடியதாக நேபாள நாட்டைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, பொம்மசந்திராவைச் சோ்ந்த சச்சின்குமாா் (25), ராஜேஸ்வரி நகரைச் சோ்ந்த முகேஷ் (22), கௌதேனஹள்ளியைச் சோ்ந்த கிரண் (19), ஏகிராஜு (45), ஹொரமாவு என்.ஆா்.ஐ லேஅவுட்டைச் சோ்ந்த ராஜுசிங் (32) உள்பட நேபாள நாட்டைச் சோ்ந்த 6 போ் பெங்களூரில் தனியாா் காவலாளிகளாகப் பணியாற்றி வந்தனா். பகலில் பணிக்குச் செல்லும் இவா்கள் 6 பேரும் இரவில் பூட்டியுள்ள வீடுகளை அடையாளம் கண்டு திருடி வந்துள்ளனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் 6 பேரையும் கைது செய்து, ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 340 கிராம் தங்கநகை, 200 கிராம் வெள்ளிப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் ராமமூா்த்தி நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com