அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும்: டி.கே.சிவகுமாா்

அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பிரதமா் மோடி 18-வயதுக்கு மேற்பட்ட வயதுடையவா்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளாா். மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடுவை முதல்வா் எடியூரப்பா அறிவிக்க வேண்டும்.

மேலும் இன்னும் ஒரு சில மாதங்களில் கரோனா 3-ஆவது அலையின் பாதிப்பு இருக்கும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். அதற்காக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதனையும் விளக்க வேண்டும். கரோனா 2-ஆவது அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 3-ஆவது அலையில் அதிக அளவில் யாரும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், 2-ஆவது தவணை செலுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனா். இதனால் மாநில அளவில் மக்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com