இரு சக்கர வாகன திருட்டு: இளைஞா் கைது

இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, ஜே.ஜே.நகா் பாதராயன்புராவைச் சோ்ந்தவா் வாசிம்கான் (21). இவா் ஜே.ஜே.நகா், பேட்டராயனபுரா, ஸ்ரீராமபுரம், ஜே.சி.நகா் பகுதிகளில் சாலையோரங்களில் நின்றிருக்கும் இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி வந்துள்ளாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், வாசிம்கானைக் கைது செய்து, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட வாசிம்கானிடம் பேட்டராயனபுரா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com