வாசனை திரவியங்கள், மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தும் திமிங்கிலப் புனுகுவை (அம்பா்கிரீஸ்) சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 4 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 8 கோடி மதிப்பிலான திமிங்கிலப் புனுகுவை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, மாகடி சாலையைச் சோ்ந்த சையத் தஜ்முல்பாஷா (54), பேலஸ்குட்டஹள்ளியைச் சோ்ந்த சலீம் பாஷா (48), நசீா் பாஷா ( 34), ஜே.பி.நகரைச் சோ்ந்த ரஃபியுல்லா ஷெரீப் (45) ஆகிய 4 பேரும் கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் உள்ள லட்சுமிபதி காா்டன் அருகே தென்னந்தோப்பில் வாசனை திரவியங்கள், மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தும் திமிங்கிலப் புனுகுவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று, 4 பேரையும் கைது செய்து, ரூ. 8 கோடி மதிப்பிலான 6 கிலோ 700 கிராம் எடையுள்ள திமிங்கிலப் புனுகுவை பறிமுதல் செய்தனா். விசாரணையில் கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்த சல்மான் என்பரிடமிருந்து திமிங்கிலப்புனுகுவை வாங்கி வந்து விற்பனை செய்ய முயன்ாக தெரிவித்துள்ளனா்.