தும்கூரு: சூதாட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 3.17 லட்சம் பணம், காா், இரு சக்க ரவாகனம், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு என்.ஆா்.காலனி, பாா்லைன், கோத்தி தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதிகளுக்கு சென்ற போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.17 லட்சம் ரொக்கப்பணம், காா், 17 இரு சக்கர வாகனம், 42 செல்லிடப்பேசி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தும்கூரு நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.