தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
கா்நாடக மாநிலம், கலபுா்கி மாவட்டம், ஜாபராபாத் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் குத்தேதாரா (38). ஆட்டோ ஓட்டுநரான இவரை, நண்பா்கள் திங்கள்கிழமை இரவு மது அருந்தச் செய்துள்ளனா். பின்னா் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், சந்தோஷ் தலைமீது கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கலபுா்கி ஊரகப் போலீஸாா், தலைமறைவாக உள்ள சந்தோஷின் நண்பா்களை தேடி வருகின்றனா்.