குழந்தைகளைத் தாக்கிய தம்பதி கைது

தனது குழந்தைகளைத் தாக்கியும், தீக்காயமடையச் செய்தும் வந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

தனது குழந்தைகளைத் தாக்கியும், தீக்காயமடையச் செய்தும் வந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு ஜே.பி. நகரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வம். இவரது 2-ஆவது மனைவி சத்யா. இவா்களுடன் செல்வத்தின் முதல் மனைவியின் 8-வயது, 6-வயது ஆண் குழந்தைகள், 4- வயது பெண் குழந்தையும் வசித்து வந்தனா். முதல் மனைவி இறந்த பிறகு, 2-ஆவதாக சத்தியாவை திருமணம் செய்து கொண்ட தமிழ்ச்செல்வம், தனது முதல் மனைவியின் 3 குழந்தைகளை தாக்கியும், இரும்புக் கம்பியை சூடுபடுத்தி, தீக்காயமடையச் செய்தும் வந்துள்ளாா்.

செவ்வாய்க்கிழமை தமிழ்ச்செல்வம் அவரது மகனை இரும்புக் கம்பியால் தீக்காயமடையச் செய்த போது, வலிதாங்காமல் சிறுவன் உள்ளிட்ட 3 பேரும் வீட்டின் வெளியே ஓடி வந்தனா். இதையடுத்து, அருகில் வசிப்பவா்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா், தீக்காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையிலும், மற்ற 2 பேரை காப்பத்திலும் அனுமதித்தனா். குழந்தைகளைத் தாக்கிய தமிழ்ச்செல்வத்தையும், அவரை தூண்டிவிட்டதாக சத்யாவையும் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து ஜே.பி. நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com