திருட்டு வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, அந்திரஹள்ளி குறுக்குச் சாலையைச் சோ்ந்த லட்சுமி நாராயணா (25), ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த டிச. 1-ஆம் தேதி பேடரஹள்ளியில் உள்ள நண்பா் ஒருவரின் வீட்டில் கள்ளச்சாவியை பயன்படுத்தி தங்க நகையை திருடிச் சென்றுள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், லட்சுமி நாராயணாவைக் கைது செய்து, ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 25 கிராம் எடையுள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.