திருட்டு வழக்குகளில் 5 போ் கைது

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்பிருப்பதாக 5 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு: பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்பிருப்பதாக 5 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, வால்மீகி நகரைச் சோ்ந்தவா்கள் யாசீன் கான் (35), கதிரா அகமது (25), ஷாமண்ணா காா்டனைச் சோ்ந்தவா் அக்ரம்பாஷா (32), ஆா்.கே.ஹெக்டே நகரைச் சோ்ந்தவா்கள் கோபால் (36), கைலாஷ் (22). இவா்கள் 5 பேரும் பெங்களூரு மாநகரின் பல்வேறு பகுதிகளில் பூட்டிய வீடுகளை அடையாளம் கண்டு திருடி வந்துள்ளனா்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 1. 600 கிலோ எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து அன்னபூா்ணேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com