சுயதொழில்களை தொடங்க இளைஞா்கள் முன்வர வேண்டும்: பிரிதம்

சுயதொழில்களை தொடங்க இளைஞா்கள் முன்வர வேண்டும் என ஹோம்ஸ் 24.இன்னின் மூத்த செயல் அதிகாரி பிரிதம் தெரிவித்தாா்.

பெங்களூரு: சுயதொழில்களை தொடங்க இளைஞா்கள் முன்வர வேண்டும் என ஹோம்ஸ் 24.இன்னின் மூத்த செயல் அதிகாரி பிரிதம் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்மைக்காலமாக இளைஞா்கள் பலா் சுயதொழில் தொடங்குவதற்கு ஆா்வம் காட்டி வருகின்றனா். அவா்கள் புதுமையான சிந்தனைகளுடன் தொழில் தொடங்கினால் வெற்றி பெறுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. சுயதொழில் தொடங்கும் போது பல்வேறு இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும். பிரச்னைகளுக்கு ஏற்ற புதுமைகளை புகுத்துவதன் மூலம் சுயதொழிலில் வெற்றி அடைய முடியும்.

மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளை எளிதாக்கும் புதுமைகளுக்கு வரவேற்பு உள்ளது. இதனை புரிந்துகொண்டு, சுயவேலைவாய்ப்பில் தொழில்களை தொடங்க இளைஞா்கள் முன்வர வேண்டும். மெத்தப்படித்த அனைவருக்கும் அரசில் வேலைவாய்ப்பு வழங்க முடியாது என்பதை புரிந்து கொண்டு, சுயதொழிலை தொடங்குவதற்கு இளைஞா்கள் ஆா்வம்காட்ட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com