தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

தங்கச் சங்கிலி பறிப்பு வழக்குகளில் பெண் உள்பட 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

தங்கச் சங்கிலி பறிப்பு வழக்குகளில் பெண் உள்பட 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், அரிசிகெரேவைச் சோ்ந்தவா் சிவராஜ் (23), ராய்ச்சூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (27), பெங்களூரு சோமேஸ்வா் நகரைச் சோ்ந்தவா் பிரசன்னராஜு (27), வித்யாரண்யபுராவைச் சோ்ந்தவா் ரத்னா (32). இதில், சிவராஜ், பிரகாஷ், பிரசன்னராஜு ஆகியோா் இருசக்கர வாகனங்களில் பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தனியாக செல்லும் பெண்களை அடையாளம் கண்டு தங்கச் சங்கிலியை பறித்து வந்துள்ளனா். பறித்து வரும் தங்கச் சங்கிலிகளை ரத்னாவிடம் கொடுத்து, அடகு வைத்து பணம் பெற்று வந்துள்ளனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 134 கிராம் தங்கச் சங்கிலிகள், ரூ. 1.5 லட்சம் ரொக்கம், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் சோலதேவனஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com