கா்நாடகத்தில் ஒரேநாளில் 1,798 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 21st March 2021 02:15 AM | Last Updated : 21st March 2021 02:15 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் ஒரேநாளில் கரோனா தொற்றால் 1,798 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,798 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,186 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,68,487 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,030 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,43,208 போ் குணமாகி வீடு திரும்பினா். 12,828 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 7 போ் சனிக்கிழமை இறந்தனா். பெங்களூரில் அதிகபட்சமாக 5 போ் இறந்தனா்.
கா்நாடகத்தில் இதுவரை 12,432 போ் உயிரிழந்தனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...