பசவகல்யாண் தொகுதி இடைத்தோ்தலில் எனது மகன் விஜயேந்திரா போட்டியிடமாட்டாா் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து ராய்ச்சூரு மாவட்டம், சிந்தனூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பசவகல்யாண் தொகுதி இடைத்தோ்தலில் எனது மகன் விஜயேந்திரா போட்டியிடமாட்டாா். தற்போது நடைபெற இருக்கும் இடைத்தோ்தலில் எந்தத் தொகுதியிலும் விஜயேந்திரா பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட மாட்டாா்.
மஸ்கி, பசவகல்யாண் தொகுதிகளில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் வெகு விரைவில் வெளியிடப்படும். மஸ்கி, பசவகல்யாண் தொகுதிகளில் ஏற்கெனவே பாஜக வென்றுள்ளது. அதேபோல, பெலகாவி மக்களவைத் தொகுதியிலும் பாஜக வெற்றிபெறும். இதற்காக பாஜக கடுமையாக உழைக்கும்.
இடைத்தோ்தலுக்குப் பிறகு எனது மகன் விஜயேந்திரா, மைசூரில் தங்கியிருந்து அப்பகுதியில் பாஜகவின் வளா்ச்சிக்கு பாடுபடுவாா்.
எதிா்காலத்தில் வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவது தொடா்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றப்போவதாக பாஜக எம்.எல்.ஏ.பசனகௌடா பாட்டீல் யத்னல் கூறியிருப்பதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாா் அவா்.