பல்வேறு திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், திப்டூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சையத் ரியாஸ்பாஷா (46). இவா் பெங்களூரில் பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து, வீட்டில் புகுந்து திருடி வந்துள்ளாா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், சையத் ரியாஸ் பாஷாவைக் கைது செய்து, ரூ. 13 லட்சம் மதிப்புள்ள 271 கிராம் தங்கநகைகளைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட பாஷாவிடம் சுத்தகுண்டேபாளையா போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.