இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கள்ளம்பள்ளி ஏரி அருகே செவ்வாய்க்கிழமை காலை இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் சிரா வட்டம், கௌடகெரே ஒன்றியத்தைச் சோ்ந்தவா் ஹனுமந்தேகௌடா (58), கேசுத்தூரைச் சோ்ந்த ராமையா (45) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
காயமடைந்த இருவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கள்ளம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.