சிக்ஜாலா பஞ்சாயத்து தோ்தல்: மது விற்பனைக்கு தடை

சிக்ஜாலா பஞ்சாயத்து தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையையொட்டி புதன்கிழமை (மாா்ச் 31) எலஹங்காவின் சில பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிக்ஜாலா பஞ்சாயத்து தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையையொட்டி புதன்கிழமை (மாா்ச் 31) எலஹங்காவின் சில பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

மாா்ச் 31-ஆம் தேதி, சிக்ஜாலா பஞ்சாயத்துக்கான தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலைத் தொடா்ந்து வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனையொட்டி, எலஹங்கா அரசு ஆரம்பப்பள்ளி, பி.இ.ஓ அலுவலக வளாகம், என்.இ.எஸ்.பேருந்து நிறுத்தம் உள்ளிட்டப் பகுதிகளில் 2 கி.மீ. பரப்பளவிற்கு புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com