செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகளில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு ஊரகம், கியாலசனஹள்ளியைச் சோ்ந்தவா் சதீஷ் (25). இவா் பெங்களூரு, பெங்களூரு ஊரக மாவட்டங்களில் தனியாகச் செல்பவா்களை அடையாளம் கண்டு செல்லிடப்பேசிகளைப் பறித்து வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், சதீஷைக் கைது செய்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 40 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட சதீஷிடம் ஜிகினி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.