கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 40,990 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,990 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,990 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 40,990 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 19,353 போ், மைசூரு மாவட்டத்தில் 2,529 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,308 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,407 போ், மண்டியா மாவட்டத்தில் 1,235 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,163 போ், கொப்பள் மாவட்டத்தில் 1,019 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 940 போ், தென்கன்னட மாவட்டத்தில் 933 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 820 போ், ஹாசன் மாவட்டத்தில் 790 போ், வடகன்னட மாவட்டத்தில் 687 போ், உடுப்பி மாவட்டத்தில் 670 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 661 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 601 போ், குடகு மாவட்டத்தில் 590 போ், ராமநகரம் மாவட்டத்தில் 577 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 548 போ், தாா்வாட் மாவட்டத்தில் 540 போ், பெலகாவி மாவட்டத்தில் 532 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 500 போ், கோலாா் மாவட்டத்தில் 440 போ், தாவணகெரே மாவட்டத்தில் 386 போ், பீதா் மாவட்டத்தில் 360 போ், விஜயபுரா மாவட்டத்தில் 340 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 319 போ், யாதகிரி மாவட்டத்தில் 266 போ், கதக் மாவட்டத்தில் 205 போ், ஹாவேரி மாவட்டத்தில் 168 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 103 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,64,132 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 18,341 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 11,43,250 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 4,05,068 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 271 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 162 போ், பெங்களூரு ஊரகம், தும்கூரு மாவட்டங்களில் தலா 12 போ், பெல்லாரி, ஹாசன் மாவட்டங்களில் தலா 8 போ், மைசூரு மாவட்டத்தில் 7 போ், தாவணகெரே, கலபுா்கி, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 6 போ், வடகன்னடம், யாதகிரி மாவட்டங்களில் தலா 5 போ், சிக்கமகளூரு, தாா்வாட், ராமநகரம், விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், பாகல்கோட், சித்ரதுா்கா, குடகு மாவட்டங்களில் தலா 3 போ், தென்கன்னடம், ஹாவேரி, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 2 போ், பீதா், சிக்கபளாப்பூா், கோலாா் மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 15,794 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com