சட்ட ஆராய்ச்சி உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சட்ட ஆராய்ச்சி உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சட்ட ஆராய்ச்சி உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அறிவுக் கூா்மையுள்ள சட்டப் பட்டதாரிகளை ஊக்குவித்து, சட்டத்தொழிலில் இணைய உதவித் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக வழக்குகள், நீதிமன்ற நடவடிக்கைகள், சட்டத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு அறிமுகம் செய்துவைப்பதற்காக கா்நாடக உயா்நீதிமன்றத்தின் சாா்பில் சட்ட எழுத்தா் மற்றும் ஆராய்ச்சி உதவியாளா் பணியிடங்களுக்கு 19 பேரை தோ்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

50 சதவீத மதிப்பெண்களுடன் சட்டப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற, கணினி அறிவுள்ள, கா்நாடக மாநில பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ள, 30 வயதுக்கு உள்பட்ட தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை மே 29-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com