பொது முடக்க விதிமீறல்: 6,062 வாகனங்கள் பறிமுதல்
பொது முடக்கத்தின் போது விதிமுறைகளை மீறிய 6,062 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 12-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஏப். 21-ஆம் தேதி முதல் தினசரி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனப் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல், தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
ஏப். 24 முதல் 30-ஆம் தேதி வரை விதிமுறைகளை மீறிய வாகனங்கள் மீது வழக்குப் பதிந்துள்ள போலீஸாா், மொத்தம் 6,062 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். இதில் 5,502 இரு சக்கர வாகனங்கள், 264 மூன்று சக்கர வாகனங்கள், 296 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும் என்று பெங்களூரு மாநகரக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.