ஆக்சிஜன் உற்பத்தியாளா்களுடன் முதல்வா் எடியூரப்பா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சாமராஜ்நகா் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாட்டால் 24 போ் உயிரிழந்தனா். இது கா்நாடகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடா்ந்து, பெங்களூரில் திங்கள்கிழமை ஆக்சிஜன் உற்பத்தியாளா்களுடன் முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா்.
மத்திய அரசால் ஒதுக்கப்படும் ஆக்சிஜனை மாநில அரசுக்கு உரிய நேரத்தில் ஒதுக்குமாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டேங்கரில் ஆக்சிஜன் வாயுவை நிரப்பும் நேரத்தை குறைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆக்சிஜன் டேங்கரை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு வேகமாக அனுப்பத் தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அவசரத் தேவையின்போது ஆக்சிஜனைக் கொண்டு செல்ல எல்.பி.ஜி.டேங்கரை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.