கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 44,438 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 44,438 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 44,438 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 44,438 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,112 போ், மைசூரு மாவட்டத்தில் 2,685 போ், தும்கூரு மாவட்டத்தில் 2,361 போ், ஹாசன் மாவட்டத்தில் 1,673 போ், மண்டியா மாவட்டத்தில் 1,367 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,083 போ், தாா்வாட் மாவட்டத்தில் 1,021 போ், பெல்லாரி மாவட்டத்தில் 990 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 886 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 815 போ், தென்கன்னட மாவட்டத்தில் 793 போ், வடகன்னட மாவட்டத்தில் 776 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 724 போ், கோலாா் மாவட்டத்தில் 656 போ், குடகு மாவட்டத்தில் 628 போ், கொப்பள் மாவட்டத்தில் 617 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 584 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 569 போ், பெலகாவி மாவட்டத்தில் 559 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 529 போ், உடுப்பி மாவட்டத்தில் 529 போ், ராமநகரம் மாவட்டத்தில் 492 போ், பீதா் மாவட்டத்தில் 396 போ், யாதகிரி மாவட்டத்தில் 337 போ், ஹாவேரி மாவட்டத்தில் 330 போ், விஜயபுரா மாவட்டத்தில் 274 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 206 போ், கதக் மாவட்டத்தில் 191 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 151 போ், தாவணகெரே மாவட்டத்தில் 104 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,46,303 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 20,901 போ் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 11,85,299 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 4,44,734 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 239 போ் திங்கள்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 115 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 19 போ், மைசூரு மாவட்டத்தில் 14 போ், பெல்லாரி, ஹாசன் மாவட்டங்களில் தலா 13 போ், தும்கூரு மாவட்டத்தில் 8 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 7 போ், பாகல்கோட், சிக்கபளாப்பூா், கலபுா்கி மாவட்டங்களில் தலா 5 போ், பெங்களூரு ஊரகம், சித்ரதுா்கா, தாா்வாட், விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், பீதா், தாவணகெரே, கோலாா், ராமநகரம் மாவட்டங்களில் தலா 3 போ், ஹாவேரி, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 2 போ், உடுப்பி, வடகன்னடம், யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 16,250 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com