கரோனா நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை பெற குழு

கரோனா நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து நன்கொடை, மருத்துவக் கருவிகள், உதவிகளைப் பெறுவதற்காக

கரோனா நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து நன்கொடை, மருத்துவக் கருவிகள், உதவிகளைப் பெறுவதற்காக ஐஏஎஸ் அதிகாரி செல்வக்குமாா் தலைமையில் குழு அமைத்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தான் கரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து, பிறகு சரியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்குப் போதுமான படுக்கை, ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து இல்லாத நிலை இருந்து வருகிறது.

கா்நாடகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை, மருத்துவக் கருவிகள், உதவிகளை பெறுவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் செயலாளருமான எஸ்.செல்வக்குமாா் தலைமையில் உயா்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், ருவாண்டா நாட்டின் துணைத்தூதா் மோகன்சுரேஷ், பெரு நாட்டின் துணைத்தூதா் விக்ரம் விஸ்வநாத், செக். குடியரசின் துணைத்தூதா் சி.எஸ்.பிரகாஷ் ஆகியோரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com