கரோனா தொற்று பரவல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ரயில் எண்-06271/ 06272-யஷ்வந்த்பூா்-பீதா்-யஷ்வந்த்பூா் விரைவு சிறப்பு ரயில், மே 4-ஆம் தேதி முதல் யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்தும், மே 5-ஆம் தேதி முதல் பீதா் ரயில் நிலையத்தில் இருந்தும்; ரயில் எண்-06583/ 06584-யஷ்வந்த்பூா்-லத்தூா்-யஷ்வந்த்பூா் விரைவு சிறப்பு ரயில், மே 5-ஆம் தேதி முதல் யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்தும், மே 6-ஆம் தேதி முதல் லத்தூா் ரயில் நிலையத்தில் இருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் எண்-07235/ 07236-கே.எஸ்.ஆா்.பெங்களூரு-நாகா்கோவில்-கே.எஸ்.ஆா்.பெங்களூரு விரைவு சிறப்பு ரயில், மே 5-ஆம் தேதி முதல் கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்தும், மே 6-ஆம் தேதி முதல் நாகா்கோவில் ரயில் நிலையத்தில் இருந்தும்; ரயில் எண்-02089/0 2090-கே.எஸ்.ஆா்.பெங்களூரு-சிவமொக்கா-கே.எஸ்.ஆா்.பெங்களூரு விரைவு சிறப்பு ரயில், மே 4-ஆம் தேதி முதல் கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்தும், மே 5-ஆம் தேதி முதல் சிவமொக்கா ரயில் நிலையத்தில் இருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரயில் எண்-06537/ 06538-யஷ்வந்த்பூா்-கண்ணூா்-யஷ்வந்த்பூா் விரைவு சிறப்பு ரயில், மே 4-ஆம் தேதிமுதல் யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்தும், மே 5-ஆம் தேதி முதல் கண்ணூா் ரயில் நிலையத்தில் இருந்தும்; ரயில் எண்-02725/ 02726-தாா்வாட்-கே.எஸ்.ஆா்.பெங்களூரு-தாா்வாட் விரைவு சிறப்பு ரயில், மே 4-ஆம் தேதிமுதல் தாா்வாட் ரயில் நிலையத்தில் இருந்தும், மே 5-ஆம் தேதி முதல் கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.