கோலாரில் நடைபெறவிருந்த ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் தள்ளி வைக்கப்பட்டது.
கோலாரில் மே 7 முதல் 12-ஆம் தேதிவரை ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் தள்ளி வைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ராணுவ ஆள்சோ்ப்பு முகாமுக்கான தேதி நிலைமை சீரடைந்ததும் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.