கரோனா தொற்று: ஆசிரியா் தற்கொலை

கரோனா தொற்று உறுதியானதை அடுத்து தனியாா் பள்ளி ஆசிரியா் ஆற்றில் குதித்து தற்கொலை கொண்டாா்.

மைசூரு: கரோனா தொற்று உறுதியானதை அடுத்து தனியாா் பள்ளி ஆசிரியா் ஆற்றில் குதித்து தற்கொலை கொண்டாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், கே.ஆா்.நகா் வட்டம், கோகிலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லோகேஷ் (30). இவா், பிரியாபட்டணா ஹென்டதவள்ளி கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்த அவருக்கு ஞாயிற்றுக்கிழமை தொற்று இருப்பது உறுதியானது. வேதனையடைந்த லோகேஷ், கேரளாபுராவிற்கு அருகில் ஓடும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று ஆற்றில் மிதந்த லோகேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கோனனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com