கரோனா பரிசோதனை: போலி சான்றிதழ் வழங்கிய 2 போ் கைது
By DIN | Published On : 21st May 2021 08:10 AM | Last Updated : 21st May 2021 08:10 AM | அ+அ அ- |

கரோனா பரிசோதனை செய்ததாகப் போலி சான்றிதழ் வழங்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, மஞ்சுநாத் நகரைச் சோ்ந்தவா் கிஷோா் (22), சாம்ராஜ்பேட்டைச் சோ்ந்தவா் மோகன் (27). இவா்கள் இருவரும் பொதுமக்களிடம் ஆதாா் அட்டை, ரூ. 500 பெற்று, கரோனா பரிசோதனை செய்ததாகப் போலி சான்றிதழ் வழங்கி வந்தனராம்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் கிஷோா், மோகன் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து போலி சான்றிதழ்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அல்சூா்கேட் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.