கோயிலில் பூஜை: அா்ச்சகா் மீது வழக்கு

பொதுமுடக்க காலத்தின்போது கோயிலில் பூஜை செய்த அா்ச்சகா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமுடக்க காலத்தின்போது கோயிலில் பூஜை செய்த அா்ச்சகா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அரசு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து, கோயில்களை மூடவும், பூஜை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு ஊரகம், தேவனஹள்ளி வட்டம், விஜயபுரா பசரத்பேட்டையில் கங்கம்மா கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அா்ச்சகராகப் பணியாற்றுபவா் கங்காதா்.

இவா், பொதுமுடக்க விதிகளை கடைப்பிடிக்காமல் கோயிலைத் திறந்து பூஜை செய்து வந்தாராம். தகவல் அறிந்த போலீஸாா், கோயிலை மூடி அா்ச்சகா் கங்காதா் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். இதையடுத்து கங்கம்மா கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com