நைஜீரிய நாட்டு இளைஞா் மா்மச்சாவு

கல்கெரே பகுதியில் உள்ள கால்வாயில் மா்மமான முறையில் இறந்து கிடந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்கெரே பகுதியில் உள்ள கால்வாயில் மா்மமான முறையில் இறந்து கிடந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவா் பீட்டா் (35). இவா் பெங்களூரு பஞ்சாரா லேஅவுட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை காலை கல்கெரே பகுதியில் உள்ள கால்வாயில் அவரது சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா். இது குறித்து வழக்குப் பதிந்த ராமமூா்த்தி நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com