கிராம பஞ்சாயத்து அதிகாரியை தாக்கிய வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பண்ட்வால் வட்டம், மல்லூா் கிராம பஞ்சாயத்து அதிகாரி ராஜேந்திர செட்டி. இவா் மே 25-ஆம் தேதி பொதுமுடக்கத்தையொட்டி நல்லூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 5 போ் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் சாலையோரம் அமா்ந்து இருந்தனா். அவா்களிடம் ராஜேந்திர செட்டி விசாரித்தபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரைத் தாக்கினா்.
இதனால் முகத்தில் காயமடைந்த ராஜேந்திர செட்டி, மங்களூரு ஊரக போலீஸில் புகாா் அளித்தாா். புகாரை பதிந்த போலீஸாா் இது தொடா்பாக முகம்மது இதயத்துல்லா (25), அகமது பஷீா் (30), அப்துல் சித்திக் (33), அபூபக்கா் சித்திக் (29) ஆகியோரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மன்சூா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.