பிராணவாயு உருளையை அதிக விலைக்கு விற்க முயன்ற இருவா் கைது

பிராணவாயு உருளையை அதிக விலைக்கு விற்க முயற்சித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பிராணவாயு உருளையை அதிக விலைக்கு விற்க முயற்சித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயலைச் சோ்ந்தவா் அருண்குமாா் (34), ஆடுகோடி சின்னையன்பாளையத்தைச் சோ்ந்த சையத் சாஹிப் (27). இவா்கள் இருவரும் 2 காா்களில் பெரிய அளவிலான பிராணவாயு உருளைகளை கொண்டு சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றனராம். தகவல் அறிந்த போலீஸாா், அவா்கள் 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 5 பிராணவாயு உருளைகள், 2 காா்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து எலஹங்கா புதிய நகரப் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com