சமூகத்தில் அமைதியை குலைக்கும் பணியை ஆா்.எஸ்.எஸ். அமைப்பு செய்து வருகிறது

சமூகத்தில் அமைதியை குலைக்கும் பணியை ஆா்.எஸ்.எஸ். அமைப்பு செய்து வருகிறது என கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

சமூகத்தில் அமைதியை குலைக்கும் பணியை ஆா்.எஸ்.எஸ். அமைப்பு செய்து வருகிறது என கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதங்கள் இடையே நஞ்சுவிதையை விதைப்பது ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியப் பணியாக உள்ளது. ஹிந்துத்வா பெயரில் சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் பணியை ஆா்.எஸ்.எஸ். அமைப்பு செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்கிறது. அனைவரும் இணக்கமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக உள்ளது. மதவாத அமைப்பான ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் முகமுடியாக பாஜக கட்சி செயல்படுகிறது. ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் சொல்வதைக் கேட்டு செயல்படுவதே பாஜகவின் பணியாக உள்ளது.

மேலும், கா்நாடகத்தில் சிந்தகி, ஹனுகல் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது. பாஜகவின் மோசமான ஆட்சியால் மக்கள் வேதனையடைந்துள்ளனா். அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்ந்துள்ளதால், பாஜகவை மக்கள் வெறுத்துள்ளனா். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக ஆட்சியால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com