பள்ளிக்குச் சென்ற சிறுமியைக்காரில் கடத்திச் சென்று பலாத்காரம்:போலீஸாா் விசாரணை

பள்ளிக்கு சென்ற 16 வயது சிறுமி காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பள்ளிக்கு சென்ற 16 வயது சிறுமி காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டத்தின் அம்டாடி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியைக் காரில் வந்த 5 போ் கும்பல் வழிமறித்துள்ளது. அதன்பிறகு அச் சிறுமியைக் காரில் கடத்திச் சென்ற கும்பல், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா். பின்னா், அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள், சிறுமியை பிரம்மரகூட்லு என்ற இடத்தில் விட்டு தப்பிச் சென்றுள்ளனா். சிறுமியை அந்தப் பகுதியில் விட்டுச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதன்பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமி, லேடி கோஸ்சென் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா். இந்த சம்பவம் தொடா்பாக போக்ஸோ சட்டத்தின்கீழ் பன்ட்வால் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com